For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.77 கோடி ஐம்பொன் சிலைகள் கடத்தல் விவகாரம் - சென்னையில் மேலும் ஒருவர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கிட்டதட்ட 77 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் மேற்கு மாம்பலத்தில் 77 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஐம்பொன் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்கமுயன்ற தனலிங்கம், கருணாகரன் ஆகிய 2 பேர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், திரைப்பட இயக்குனர் வி.சேகர், பெண் நிருபர் மாலதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பாலவாக்கத்தைச் சேர்ந்த தமீம் பாஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்பவருக்கு உதவியாளராகவும், சிலை கடத்தலில் முக்கிய பங்கு வகித்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
another one arrested in 77 crore worth idol smuggling case in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X