For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் மீண்டும் ஒரு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளார் இன்னொரு இன்ஸ்பெக்டர்.

நெல்லை தாழையூத்து இன்ஸ்பெக்டர் சோனமுத்து. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மணல் கடத்தல் தொடர்பாக லாரியை பிடித்தார். லாரியை விடுவிக்க ரூ. 5 ஆயிரம் தருமாறு லாரி உரிமையாளர் முருகனிடம் லஞ்சம் கேட்டார்.

லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் முருகன் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., பற்குணம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் , லஞ்சம் பெறும் போது இன்ஸ்பெக்டர் சோனமுத்துவை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கிய சிவகிரி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். ஒரே மாதத்தில் 2வது இன்ஸ்பெக்டரும் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
One more inspector has been arrested for accepting bribe in Nellai dt. Earlier Sivagiri inspector was arrested and now, Thalayuthu Inspector has been nabbed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X