For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதுநகர்: மாவோயிஸ்ட்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்கிய நபர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து ஒடிஷாவில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்கியதாக‌ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாத்தூர் என்.ஜி.ஓ காலனியில் இருக்கும் குயில் குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், ஒடிஷாவில் உள்ள மாவோயிஸ்டுகளுக்கு வெடிபொருட்களை வழங்குவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.‌

இதன் அடிப்படையில், இன்று காலை அவரது வீட்டில் சோதனை செய்தபோது, வெடிபொருட்களை வழங்குவதற்காக, மோகன்ராஜ் அவ்வப்போது ஒடிிஷா சென்று வந்ததற்கான ஆதாரங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் இருந்து பண‌ப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆ‌தரங்களையும் கைப்பற்றியுள்‌ளனர்.

அவரிடமிருந்து, சல்ஃபர், அலுமினியம் பவுடர், வெடி உப்பு உள்ளிட்டவை பறி‌முதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்‌து விசாரணை மேற்கொண்டு வருகின்றன‌ர்.

English summary
One person suspected to be supplying explosives to the Maoist in Odisa. Viruthunagar district police arrested and seized the ammonium power, salt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X