திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்... ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து!
சென்னை: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளைத்தான் அறிவிக்க வேண்டும் என்று ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பகவத் கீதைய தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்துக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
அதேசமயம், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கக் கூடாது என்றும் கணிசமானோர் கூறியுள்ளனர்.

பகவத் கீதை
பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க முடியாது, கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதள வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

நிச்சயமாகக் கூடாது
பகவத் கீதையை தேசிய புனித நூலக அறிவிக்கக் கூடாது என்று 26.99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 3854 வாக்குகள் கிடைத்துள்ளன.

உடனே அறிவிக்க வேண்டும்
பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று 28.35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4047 வாக்குகள் கிடைத்துள்ளன.

திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
அதேசமயம் திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று 44.66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 6376 வாக்குகள் கிடைத்துள்ளன.
மொத்தம் பதிவான வாக்குகள் 14,277. இதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் திருக்குறளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications