கந்துவட்டி வசூலில் மதுரை டாப்: நெக்ஸ்ட் நெல்லை, விருதுநகர்- 20 பேருக்கு மட்டுமே தண்டனை
மதுரை: தமிழகத்தில் கந்துவட்டி வசூலில் மதுரை முதலிடத்தில் உள்ளது. நெல்லை, விருதுநகர் மாவட்டங்கள் 2-வது, 3-வது இடங்களில் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென் மண்டல ஐ.ஜி. தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரம். இவர், ரூ.11 லட்சம் கடனுக்காக ரூ.85 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக இமானுவேல் உள்ளிட்ட 4 பேர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இமானுவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி ஆசிரியர் சுந்தரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2003-ல் கந்துவட்டி தடுப்பு சட்டம் கொண்டுவந்த பிறகு போலீஸாருக்கு கந்துவட்டி தொடர்பாக வரப்பெற்ற புகார்கள், அந்தப்புகாரின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யவும், தமிழகத்தில் கந்துவட்டி புகார்களைக் கையாள தனிப்பிரிவு அமைப்பது தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, மகேந்திரன் வாதிட்டனர். தமிழக காவல்துறை இயக்குநர் சார்பில் தென்மண்டல ஐ.ஜி. பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கந்து வட்டி தடுப்புச்சட்டம்
தமிழகத்தில் கந்துவட்டி தடுப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து மாநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு கடந்த ஜூலை 17-ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கந்து வட்டி புகார்கள்
அதில் கந்துவட்டி வழக்குகளில் தீவிரம் காட்டவும், விசாரணை அதிகாரி முழுமையாக விசாரிக்கவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும், கூடுதல் வட்டி மற்றும் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்கவும், கந்து வட்டி புகார் வந்தால் முறையாக விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

1531 வழக்குகள்
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து 2014 ஜூலை 31 வரை தமிழகம் முழுவதும் இதுவரை கந்துவட்டி வசூல் தொடர்பாக 1531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடுமையான நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதல் வட்டி வசூலித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறச் சட்டத்தில் வழியுள்ளது. கந்து வட்டி வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கந்து வட்டி புகார்களை கையாள்வதற்கு தனி பிரிவு தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 12-க்கு தள்ளிவைத்தனர்.

மதுரையில் 220 வழக்குகள்
கந்து வட்டி வழக்குகளில் தமிழகத்தில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரை மாநகரில் 188 வழக்குகளும், மதுரை மாவட்டத்தில் 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெல்லையில் கந்துவட்டி
2வது இடத்தை நெல்லை பிடித்துள்ளது. நெல்லை மாநகரில் 30 வழக்குகளும், நெல்லை மாவட்டத்தில் 257 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

விருதுநகர் நம்பர் 3
விருதுநகர் மாவட்டம் 237 வழக்குகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. தலைநகர் சென்னை மாநகரில் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு மாவட்டங்களில்
திருச்சி மாநகர், மாவட்டம் சேர்ந்து 12, கோவை மாநகர், மாவட்டம் சேர்ந்து 35, சேலம் 33, திருப்பூர் 80 வழக்குகள் உள்ளன.

தேனியில் 99 வழக்குகள்
விழுப்புரம், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும், தஞ்சாவூரில் 5, கூடலூர் 6, திருவண்ணாமலை 7, தர்மபுரி 19, கிருஷ்ணகிரி 12, திண்டுக்கல் 23, தேனி 99, ராமநாதபுரம் 17, சிவகங்கை 40, தூத்துக்குடி 59, கன்னியாகுமரி 31 வழக்குகள் 2003-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுத்தமான நகரங்கள்
அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கந்துவட்டி தொடர்பாக வழக்குகள் இல்லை என்பது ஆறுதலானது.

20 பேருக்கு மட்டுமே தண்டனை
1531 வழக்குகளில் 297 வழக்குகள் விசாரணையில் உள்ளன. கந்துவட்டி வழக்குகளில் 20 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 388 பேர் விடுதலையாகியுள்ளனர். 401 வழக்குகள் விசாரணைக்கு பின் கைவிடப்பட்டன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிக வட்டி வசூல்
நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதல் வட்டி வசூலித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறச் சட்டத்தில் வழியுள்ளது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

உச்சநீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் 'கடுமை' காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிக்கித் தவிக்கும் வியாபாரிகள்
தமிழகத்தில் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை ஒரு படி மேலே போய், கடன் வாங்கியவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக் கொள்வது, பெண்களை சிறை வைப்பது, குழந்தைகளை கடத்துவது என, கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சிறுவியாபாரிகள்தான் இக்கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்களின் நடமாட்டம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தற்போது அதிகரித்துள்ளது என்பது வேதனை தரும் தகவலாகும்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications