For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனமழையால் ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு- பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

Google Oneindia Tamil News

ஊட்டி : நீலகிரியில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஊட்டி-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அருவங்காடு பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சரிவுகள் அகற்றப்பட்ட பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ooty hill train stopped for rain

மேலும், தொடர் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரியிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English summary
Ooty hill train temporarily stopped due to heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X