ஆங்கிலேயரின் குக்கி நம் ஊட்டியின் வர்க்கி ஆனது எப்படி
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி வர்க்கி வாங்காமல் சென்றால், அவர்களின் பயணம் முழுமை பெறாது. அனைவரும் நொறுக்கு தீனியாக ருசிக்கும், 'ஊட்டி வர்க்கி' ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பின், 'பேக்கிங்' உணவுப் பொருட்களை அதிகளவில் தயாரித்து உட்கொண்டனர். அதில், ரொட்டி, பிஸ்கட், பன், கூக்கிஸ் வகை நொறுக்கு தீனிகள் முக்கிய இடத்தை பிடித்திருந்தன.அவர்களுக்கு உதவியாக, ஊட்டியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து வந்த பலரும் பணியாற்றினர். ஆங்கிலேயர் தயாரித்த கூக்கிஸ் வகைகளை, இங்குள்ளவர்கள் 'குக்கி' என அழைத்துள்ளனர். அந்த பொருட்களுக்கு மாற்றாக, சற்று மொறு மொறுவென, ஒரு தின்பண்டத்தை உருவாக்கினர். இந்த தின்பண்டத்தை ஊட்டி குளிரில், தேநீர் அல்லது காபியில் தொட்டு உண்பதில், ஆங்கிலேயர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூக்கிஸ்' பொருளுக்கு மாற்றாக, 'வற, வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி' என பெயர் மருவியது. 'ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு.
ஊட்டி வர்க்கியை இயந்திரங்களை வைத்து செய்ய முடியாது. எண்ணெய், மாவு, சர்க்கரை, தண்ணீர் கொண்ட கலவையை மட்டுமே இயந்திரத்தில் உருவாக்க முடியும். மற்ற அனைத்து பணிகளையும் ஆட்களை கொண்டு மட்டுமே செய்ய வேண்டும் என்பதால், இதன் தேவை அதிகரித்தும், உற்பத்தி பற்றாக்குறைவாகவும் இருந்து வருகிறது.
ஊட்டியில் 40 ஆண்டுகளாக வர்க்கி உற்பத்தி செய்யும் பிரபல பேக்கரி ஓனர் கூறுகையில், "ஊட்டியின் தண்ணீர் மற்றும் காலநிலைதான், வர்க்கியின் சுவைக்கு முக்கிய காரணம். திருப்பூரில் இதே சுவையுடன் வர்க்கி தயாரிக்க முயன்றும் முடியவில்லை. இதனை விறகு அடுப்பில் உருவாக்கினால், மட்டுமே முழு சுவை கிடைக்கும்," என்றார்.
இத்தனை சுவை மிகுந்த சிறப்பான ஊட்டி வர்க்கியை அனைவரும் வீட்டில் இருந்தே வாங்கி சுவைக்கும் வகையில் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம்.
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.