ஒரு நாயகன் உருவாகிறான்... டுவிட்டரில் டிரெண்ட் ஆன ஓபிஎஸ் #OPannerselvam
சசிகலாவிற்கு எதிராக மெரீனாவில் மவுனப்புரட்சி நடத்திய ஓ.பன்னீர் செல்வத்திற்கு மக்களின் ஆதரவு பிரபலங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. டுவிட்டரில் ஓபிஎஸ், ஓ.பன்னீர் செல்வம், தமிழக அரசியல், சசிகலா என்ற ஹேஸ
சென்னை: முதல்வராக இருந்த என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறிய உடன் தமிழக அரசியல் களமே பரபரப்படைந்தது. விடிய விடிய போயஸ்கார்டனும், கிரீன்வேஸ் சாலையும் விழித்திக்கொண்டிருந்தது.
சமூக வலைத்தளங்களும் விடிய விடிய விழிப்போடு இருந்தன. வலைத்தளவாசிகள் தங்களின் கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்களும் சசிகலாவிற்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
|
கமல் டுவிட்டர்
சரித்திரம் படைத்த பிப்ரவரி 7ஆம் தேதி. இதே பிப்ரவரி 7ஆம் தேதிதான் மக்களின் அன்பிற்கு முன்னாள் அதிகாரம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன். இப்போது இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் கமல். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி விஸ்வரூபம் வெளியானது.
|
நிம்மதியாக தூங்கு
'நிம்மதியாய் தூங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்
|
நாயகன் உருவாகிறான்
தமிழக அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் கவனித்து டுவிட்டரில் பதிவு செய்யும் குஷ்பு, மெரீனாவில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்த போதே ஒரு நாயகன் உருவாகிறான் என்று பதிவிட்டார்.
|
எதிர்பார்க்கலைல்ல
திரும்ப வந்து எதிர்த்து நின்னு அடிப்பேன்னு எதிர்பார்க்கலைல்ல என்று சூர்யா பணியில் கேட்பதாக ஓபிஎஸ்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
|
எதிர்பாராத டுவிஸ்ட்
கொடி படத்தில் அமைதியான தனுஷ்க்கு பதிலாக ஆக்ரோச தனுஷ் வெளியே வர அதை ஆச்சரியமாக பார்க்கும் திரிஷாவை போஸ்டரில் போட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.
மொத்தத்தில் ஓபிஎஸ் நிம்மதியாக தூங்கியிருப்பார் ஆனால் வலைத்தளவாசிகள்தான் விடிய விடிய விழித்து பதிவிட்டனர்.