கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்: சொல்வது யார் தெரியுமா?
சென்னை: தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி இணையதளம் மூலம் வாக்காளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1,700 அரசியல் கட்சிகளில் 150 தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதில் தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாக நடந்துள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் உடனுக்குடன் பணியமர்த்தப்பட்டதில் இருந்து தமிழக அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு செய்துள்ளது தெரிகிறது.
தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நடத்தி வரும் சோதனைகளால் பெரிய தாக்கம் ஒன்றும் ஏற்படாது. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, கருத்துக்கணிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும். அதனால் அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications