மத, மொழி வேற்றுமை குறித்த எதிர்கட்சிகளின் விமர்சனம் அடிப்படை ஆதாரமற்றது: தமிழிசை
சென்னை : மத்திய அரசு மத மற்றும் மொழி வேற்றுமையைக் கடைபிடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று அக்கட்சியின் சார்பில் நல்லாட்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் சாலைகளைத் தூய்மைப் படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் சாலைகளைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, மத்திய அரசு மத, மொழி வேற்றுமையை கடைப்பிடிப்பதாக எதிர்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘எதிர்கட்சியின் விமர்சனம் அடிப்படை ஆதாரமற்றது' என தமிழிசை பதிலளித்தார்.
மேலும், ' 2016-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய பாஜக தனது சக்தியை முழுமையாக பயன்படுத்தும்' என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications