சேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்
சேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் -சென்னை இடையே 277 கிமீ., 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக பூர்வாங்க பணிகள் திவீரமாக நடந்து வருகிறது.

இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதை எதிர்த்து தன்னிச்சையாகவே 5 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜுலை 4ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கவுள்ளன.
ஏற்கனவே சேலம் - சென்னை இடையே 3 வழித்தடங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்தாமல், புதிதாக சாலை அமைப்பது தேவையற்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அரசாக இருந்தால், இதுகுறித்து மக்களிடம் கருத்து பெற்றிருப்பார்கள்.
ஆனால், இந்த அரசு மக்கள் கருத்து குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விரைவில், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications