Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி… வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.15 கோடி மட்டுமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசு, வேலையில்லா பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வெறும் 2015-16ஆம் நிதியாண்டில் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்

OPS announces Rs 90 cr for temples renovation
  • பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு.
  • அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி.
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களில் விரிவுபடுத்தப்படும்.
  • சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி.
  • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.140.12 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மக்கள் நலவாழ்வு திட்டத்திற்கு ரூ.8245 கோடியாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
  • முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.
  • மகளிர் சுகாதார திட்டத்திற்கு ரூ.60.58 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஏழை கர்ப்பிணி பெண்களின் நலவாழ்வு திட்டத்திற்காக ரூ.668.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
  • கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை கிராம இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • லட்சம் பேருக்கு தொழில் திறன் பயிற்சி. தகவல் தொழில்நுட்பத்திற்கு ரூ.82.49 கோடி.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு. கைத்தறி விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி மானிய திட்டம் தொடரும்.
  • 2015 -16 நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்புகளைத் தவிர மேலும் பல முக்கிய திட்டங்களையும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+