For Daily Alerts
Just In
முதல்வராக தொடர வேண்டுமா?.. டிவிட்டரில் கேள்வி கேட்ட ஓ.பி.எஸ்.. மக்கள் அமோக ஆதரவு!
ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் மத்தியில்ஆதரவு கிடைத்துள்ளது.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
முதல்வர் ஓ.பி.எஸ் பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில்தான் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அக்கேள்விக்கு, முதல்வராக தொடர வேண்டும் என்று 95 சதவீதம் பேரும், நீடிக்க வேண்டாம் என்று 5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
@CMOTamilNadu என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில்தான் இந்த போல் ஓடிக் கொண்டுள்ளது. முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கமாக இது கருதப்படவில்லை என்றாலும் கூட இது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இதில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்பு கேள்வியும் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
People's survey.
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 7, 2017
Should hon CM continue the post to lead TamilNadu?
Comments
English summary
Chief Minister O Panneerselvam has asked the people whether he should continue as CM or not in his Twitter page.