ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்தால்.. சட்டத்தை வைத்து சத்தாய்க்க தினகரன் திட்டம்.. வக்கீல்களுடன் தீவிர ஆலோசனை!
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்தால் அடுத்த நடவடிக்கை என்ன எடுப்பது என்பது தொடர்பான அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: இரு அணிகள் இணைப்பு செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையே இரு அணிகளும் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இணைப்பு நடந்துவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் இணைந்தால் சட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தினகரன் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் பிறகு அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications