மாத்தி மாத்தி பேசும் இபிஎஸ் அணி, கடுப்பில் ஓபிஎஸ் அணி: இரு அணிகளும் சேருமா?
சென்னை: இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருவதால் இரு அணிகளை இணைப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது.
அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக உடைந்தது. தற்போது சசிகலா அணியில் இருந்து இபிஎஸ் அணி தனியாக வந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் சேர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.
முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியோ அந்த பதவிகளை அளிக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

வெற்றி
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை ஓபிஎஸ் அணி முன்வைத்துள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார். இதை பார்த்த ஓபிஎஸ் இது எங்களின் தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.

ஜெயக்குமார்
இபிஎஸ் அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரோ விட்டால் அமெரிக்காவில் டிரம்ப் என்னால் தான் வெற்றி பெற்றார் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறுவார் என்றார். இதை கேட்டு ஓபிஎஸ் அணி கடுப்பானது.

தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை கூறுகையில், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி தான் நீடிப்பார். அவர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளவர் என்றார்.

வைத்திலிங்கம்
அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கூறுகையில், ஜெயலலிதா மரணம் அடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் தானே முதல்வராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே என்று கேட்டார்.

பிரச்சனை
எடப்பாடி அணியினர் தெரிவித்து வரும் கருத்துகளால் ஓபிஎஸ் அணியினர் எரிச்சலில் உள்ளனர். இதனால் இரண்டு அணிகளையும் இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications