தினகரனுடன் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ மாணிக்கம் சந்திப்பு... அணி மாற முயற்சியா?
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரையில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக 3 அணிகளாக பிளவுப்பட்டு மல்லுக்கட்டி வரும் ந
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரையில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக 3 அணிகளாக பிளவுப்பட்டு மல்லுக்கட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்றும், அவரை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தது செல்லாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலூரில் பொதுக் கூட்டத்துக்கு தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. டிடிவி தினகரன் இன்று காலை மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது அந்த கோயிலுக்கு வந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் சந்தித்து பேசியதாக தெரிகிறது. மாணிக்கும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவராவார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது அணி மாறுவதற்கான அடித்தளமா என்பது போக போகத்தான் தெரியும்.
ஓபிஎஸ்ஸுக்கு முதல் முதலாக ஆதரவு தெரிவித்தவர் எம்எல்ஏ மாணிக்கம். அதேபோல் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி சமீபத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications