ராகு காலம் முடிந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன்
சென்னை : தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தனர். இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், அமைச்சர்கள் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐவரணியில் இருந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வரிசையாக கட்டம் கட்டப்பட்டனர். இருவரும் தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை என எதிலுமே பங்கேற்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடும் எச்சரிக்கைக்குப் பின்னரே கட்சி செயல்பாடுகளில் ஈடுபட இருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் செல்ல ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர்.

இன்று காலை ராகு காலம் 10.30 மணிக்கு முடிவடைந்தவுடன் கட்சி அலுவலகத்திற்குள் கால் வைத்தனர். அதேநேரத்தில் ஐவரணியில் இருந்த மற்றொரு அமைச்சர் பழனியப்பனுக்கு தடை நீடிக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூட்டணி பற்றி பேச இன்று சிறிய கட்சியினர் வந்துள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.வி. வேலுமணி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications