தந்தை ஓ.பி.எஸ் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறாரே..!
சென்னை: தந்தை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் படத்தை சட்டைப்பையில் வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் கட்-அவுட் வைத்து நிவாரண உதவி செய்கிறாராம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் நிவாரண உதவி பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் கலாட்டா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலாட்டா செய்வோர் பற்றி புகார் தெரிவிக்க, 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய தொலைபேசி எண்களிலும், [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும், @aiadmkofficial என்ற டிவிட்டர் அக்கவுண்டிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

பொதுமக்களிடம் பிரச்சினை செய்ததாக இதுவரை, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கல் கூறுகின்றன.
இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயலலிதா கட்-அவுட்டை நிறுவி, அதன் அருகே நின்று நிவாரணம் கொடுக்கும் படம் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. தந்தை, ஓ.பி.எஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா போட்டோ வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒருபடி மேலே போய்விட்டார் என்கிறார்கள் வலைவாசிகள்.












Click it and Unblock the Notifications