ஆர்கே நகரில் ஓபிஎஸ் ஆதரவாளர் தற்கொலை-சசி தரப்பு எம்எல்ஏ திட்டியதே காரணம்-குடும்பத்தினர் பகீர் புகார்
ஆர்.கே.நகரில் தினகரன் கோஷ்டி மிரட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் தினகரன் அணியினர் மிரட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர், நெடுஞ்செழியன் நகரில் வசித்து வந்தவர் கண்ணப்பன். 50 வயதான இவர் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர். ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் பணியாற்றி வந்தார்.

மதுசூதனனை ஆதரரித்து கண்ணப்பன் நேற்று பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் கண்ணப்பனை மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கண்ணப்பன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சசிகலா ஆதரவு எம்எல்ஏ ஒருவர் திட்டியதே கண்ணப்பன் தற்கொலைக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆர்.கே.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications