Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாத்மாவின் மறு உருவம் எடப்பாடி.. இந்த வழக்கை விடுங்க.. எல்லாம் தள்ளுபடி.. ஓபிஎஸ் ஆதரவாளர் சீண்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி" என ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்புகள் குறித்து விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

அதிமுக விவகாரத்தில் அனைத்து வழக்குகளிலும் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனை கேள்விக்குட்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஓபிஎஸ் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகளை தனி நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்து வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஒரே ஒரு பிடி

ஒரே ஒரு பிடி

இந்நிலையில், தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான சில வாய்ப்புகள் உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் கூறுகின்றனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தைப் பொறுத்தவர பிரதான வழக்கு தான் தீர்மானிக்க முடியும், இது தான் இறுதி தீர்ப்பு என சொல்ல முடியாது. ஒற்றை நீதிபதி சொன்ன தீர்ப்பு இறுதியாகாது. நிச்சயம் மேல் முறையீடுட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். கடந்த 9 மாத காலமாக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் தனக்கு சாதகமாக ஒரு பிடியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

மகாத்மா எடப்பாடி

மகாத்மா எடப்பாடி

இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதைச் சுட்டிக்காட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
"கொடநாட்டுல கொலை கொள்ளையே நடக்கல
நாலாயிரத்து ஐநூறு கோடிக்கு டெண்டர்ன்னு ஒன்னே நடத்தல..
எடப்பாடி கட்சியை அபகரிக்கல..
நிலக்கரி காணமல் போகல..
ஊழல்னு ஒன்னு தமிழக எல்லைக்குள்ளேயே இருக்கல..
குட்காவே விற்கல..
எடப்பாடி ஆட்கள் வருமானத்துக்கு அதிகமா சொத்து ஏதும் சேர்க்கல..
மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி மீது போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..
குறிப்பு- "பசிக்கு வடை திருடியவருக்கு பத்து மாதம் சிறை" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்டு அம்பயர்

தேர்டு அம்பயர்

மேலும் மற்றொரு பதிவில், "முதல் நடுவர் இரண்டாம் நடுவர் ஆகியோரது தவறான தீர்ப்புகளை Third அம்பயர் எனப்படும் மூன்றாம் நடுவர் ஆதாரப்படுத்தி மாற்றி அறிவிப்பது கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. அரசியலிலும் உண்டு. ஒருவேளை அந்த மூன்றாம் நடுவர் வேலையை தேர்தல் ஆணையமும் சரியாக செய்யவில்லை என்றால்.. அந்த பொறுப்பை மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளும். அப்படி மக்கள் மன்றத்தால் எழுதப்படும் தீர்ப்பு என்பது கடுகளவும் பிசகாத தர்மத்தை நிலைநாட்டும்." என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+