சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் ஓ.பி.எஸ். #ISupportOPS
மக்கள் ஆதரவை பெற டிஜிட்டல் யுக்திகளை கையாண்டு வருகிறது பன்னீர்செல்வம் ஆதரவு பெற்ற ஐ.டி. குழு
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களைக் கொண்ட தொழில் நுட்ப குழு.
சமீபகாலங்களில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரும் புரட்சியை ஏற்டுத்தி வருகிறது. அதன் தாக்கம் எத்தகையது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் உலகமே அறிந்தது. அந்த வகையில் சமூக வலைதளங்களி மூலம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவை திரட்ட களம் இறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களை கொண்ட தொழில் நுட்பக்குழு. இதற்காக ஆறு பேர் கொண்ட ஐ.டி குழு ஒன்றை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் லேப்டாப்களுடன் அமர்ந்து, ஆதரவாளர்களின் விவரங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பகிரப்படுகின்றன. மேலும் ஆதரவாளர்களை மைக்கில் பேச வைத்து அவற்றை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்புகின்றனர்.

i support ops என்பன போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதில் அவருக்கு ஆதரவானவர்களின் பதிவுகளை வெளியிடுகின்றனர். விரைவில் பன்னீர்செல்வத்திற்கு என தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications