நிபந்தனைகளை நிறைவேத்திட்டோம்.. இனி சீக்கிரம் சேர்ந்திடுவோம்.. திண்டுக்கல் சீனிவாசன் உறுதி: வீடியோ
ஓபிஎஸ் அணி வைத்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிட்டோம். இனி சீக்கிரம் இணைந்துவிடுவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவின் பிளவுபட்டுள்ள ஓபிஎஸ் அணியுடன் இணைய காத்திருக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம் தொடங்குவதற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் இணைந்து செயல்பட காத்திருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதிமுக அணிகள் இணைவதற்கு நாங்களும் ரெடி ரெடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வருவார்கள். இணைப்பு சுமூகமாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அவர்கள் என்னென்ன நிபந்தனைகள் விதித்தார்களோ அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்.
எங்களிடம் எந்தவித நிபந்தனையும் இல்லை. அவர்கள் என்ன சொல்லி இருந்தார்களோ அதனை நாங்கள் செய்துள்ளோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.