Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவப்பெட்டியில் ஜெ. உருவபொம்மை மீதுள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

மறைந்த ஜெயலலிதா உருவபொம்மை போன்ற மாதிரி சவப்பெட்டியில் தேசியக்கொடியை போர்த்தி ஓ.பி.எஸ் அணி பரப்புரை மேற்கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரச்சார வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ops team uses 'mock coffin' to seek votes in r.k.nagar by poll

அதிலும் ஓபிஎஸ் அணியினர் ஒரு படி மேலே போய் நூதன முறையில் வாக்கு சேகரித்தனர். இதில் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு சேகரித்தனர்.

ஆர்.கே நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் இந்த நூதன பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரசார வாகனத்தில் உள்ள ஜெயலலிதா உருவபொம்பை மீது தேசியக்கொடி போற்றப்பட்டிருந்ததை அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தேசியக் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் ஓபிஎஸ் அணியினருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து தேசியக் கொடி அகற்றப்பட்டது.

அப்போது தேசியக் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் ஓபிஎஸ் அணியினருக்கு உத்தரவிட்டனர். தேர்தல் பிரசாரத்திற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினரும் அறிவுறுத்தினர். இதையடுத்து தேசியக் கொடி அகற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+