பாஜக அரசின் 3 ஆண்டு நிறைவு.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்!
3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் 3 ஆண்டுகள் நிறைவை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014, மே 26 அன்று நாட்டின் ஆட்சித் தலைமைக்கு பொறுப்பேற்று கொண்டது.

தற்போது பாஜக ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாஜக. மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் சாமனிய மக்களின் வாழக்கை தரம் உயரவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனை திட்டங்களை நிறைவேற்றி 3 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது.
பாரத திருநாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் நரேந்திரமோடிக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications