இலங்கை சிறையில் 30 மீனவர்கள்.. 119 படகுகள்.. விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள 30 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும் 119 படகுகளையும் விடுவிக்க அவர் கோரியுள்ளார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள், நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எடுத்துச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சிறையில் 25 பேர் உள்ள நிலையில் இந்த 5 பேரை சேர்த்து 30 பேர் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று எதிர்க்காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ மக்கள் கோரி வந்தாலும், அதற்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications