கார சாரமான செட்டிநாடு மிச்சர் இப்பொழுது ஆன்லைனில்!!
பொதுவாக செட்டிநாடு உணவு வகை என்றாலே காரம் சற்று அதிகமாகவே இருக்கும், ஆனால் இந்த செட்டிநாடு மிச்சரில் காரம் மிக அதிகமாகவே இருக்கும், ஏனென்றால் இதை உண்டால் ஒரு விதமான புத்துணர்ச்சி உண்டாகும். இந்த மிச்சர் ஒரு வகையான சுவையும் மனமும் கலந்த ஒரு கரமான தின்பண்டம்
செட்டிநாடு மிச்சர்
உலகில் பல வகை மிச்சர் இருக்கும் போது, அது என்ன செட்டிநாடு மிச்சருக்கு மட்டும் ஒரு வகை தனி சிறப்பு ? செட்டிநாடு மிச்சர் என்பது ஒரு விதமான கார சாரமான தின்பண்டம். அதாவது இதற்க்கு தேவையான பொருட்களை எல்லாம் இவர்களின் நிலத்திலே விளைந்தது.
சாதாரணமாக மிச்சர் தயாரிக்கும் முறையில் தான் இந்த செட்டிநாடு மிச்சரையும் தயாரிக்கவேண்டும் , ஆனால் அதில் காரதிற்காக சேர்க்கும் மிளகாய் தூள் மிகவும் காரமாக இருக்கும். இந்த மிச்சர் ஏன் இவ்வளவு ஆரோக்யமானது என்றால் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அவர்களின் சொந்த நிலத்திலே தயாரித்து, பூச்சி கொல்லி மருந்து எதுவும் தெளிக்காமல், பக்குவமாக பயிரிடப்பட்டு, அதை வைத்து செய்கிறார்கள்
செட்டிநாடு மிச்சர் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - அரை கப்
பெருங்காயம் - தேவையான அளவு
கடலை பருப்பு - 1 கப்
அவுல் - 1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செட்டிநாடு மிளகாய் தூள் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மிச்சர் செய்வதற்கு முழு முதல் தேவையானது ஓமப்புடி தான். அதை எப்படி செய்வது என்று பார்போம்.
ஓமப்புடி
முதல் படியாக கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இவை மூன்றையும் நன்றாக பிசைய வேண்டும். நடுவில் சிறிது தண்ணீர் விற்று அதை பிசையவேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் அந்த பக்குவம் வரும். இடியப்பம் பிழியும் இயந்திரத்தை எடுத்து அதில் இந்த கலவையை போட்டு, நன்றாக பிழியவேண்டும். ஒரு வானொலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில் இந்த கலவையை பிழியவேண்டும். பொன்னிறமாக வந்த பிறகு அதை எடுத்து விடவும்.
பூந்தி
ஒரு கப் கடலை மாவு எடுத்து கொண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். நடுவில் சிறிது தண்ணீர் விற்று அதை பிசையவேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் அந்த பக்குவம் வரும். இந்த கலவை எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒரு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். ஒரு வாணலியை தேவையான அளவு எண்ணையை ஊற்றி அதில் இந்த கலவையை ஒரு ஜல்லி கரண்டியில் ஊற்றி தனி தனியே பிரித்து போடவும். பொன்னிறமான பதத்தில் அந்த பூந்தி வந்தால் அதை எடுத்து வைத்து விடுங்கள்.
இவை இரண்டும் தயார் ஆனா பிறகு அவுல், கருவேப்பிலை, கடலை பருப்பு, பொட்டுகடலை, இந்த நான்கு பொருட்களையும் தனி தனியே எண்ணையில் போட்டு நன்றாக பொறித்து எடுக்க வேண்டும். கடலை பருப்பை பொரிக்கும் பொது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் அது வெடிக்கும் தன்மை கொண்டவை.
பிறகு அந்த ஓமப்புடி, பூந்து, எண்ணையில் பொரித்த உணவு பொருட்கள், இவை மூன்றையும் சேர்த்து, அதில் சிறிதளவு பெருங்காயம், உப்பு, காரத்திற்க்காக செட்டிநாடு மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சுவையான கார சாரமான செட்டிநாடு மிச்சர் தயார். இதை நீங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறலாம்
இந்த செட்டிநாடு மிச்சரி செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு பொறுமையும், ஒரு வகையான பதமும் தேவை. ஆனால் பொறுமை இல்லாமால் பல பேர் இந்த மிச்சரி பேக்கரி கடைகளில் வாங்குகின்றன. ஆனால் இந்த வகை மிச்சர் தரமற்ற எண்ணையிலும், தரமற்ற பொருட்களிளாலும் செய்யப்படுகிறது. இவையெல்லாம் உடம்பிற்கு கேடு விளைவிக்க கூடும்
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த தூத்துக்குடி மக்ரூனை, தூத்துக்குடியில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த தூத்துக்குடி மக்ரூனை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்.