எலும்புகளின் வலுவை அதிகரிக்கும் நேந்திரம் சிப்ஸ்..!
சிப்ஸ் சாப்பிடலாமா..னு கேட்ட எந்த சிப்ஸ்னு கேக்குற அளவுக்கு சிப்சில அவ்வளவு வகை இருக்கு. இதுல நேந்தரம் பழம் சிப்ஸ்னா அது கேரளா சிப்ஸ் தான். ஆனா இங்க இந்த நேந்தரம் சிப்ஸ் கேரளால மட்டும் இல்லங்க தமிழ்நாட்டில நாகர்கோயிலயும் இந்த சிப்ஸ் அவ்வளவு பிரபலம். இந்த நாகர்கோயில் சிப்ஸ் இப்போ உங்க இடத்துக்கு உங்க தேடி வரப்போகுது ஸ்வீட்கானா.காம் மூலம்.
நாகர்கோயில் நேந்தரம் பழம் சிப்ஸ் வாங்க..
நேந்தரம் பழ சிப்ஸ் அப்படினா என்ன..? இது ஒருவகையான வாழைப்பழ சிப்ஸ்ங்க. மற்ற சிப்ஸ்க்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க என்ன அதுன்னு பார்த்தா அது இதோட ருசிதாங்க. ஒரு தடவ இதோட ருசி நாக்குல ஒட்டுனாலே போதும். அடுத்த தடவையும் நம்ம நாக்கு இந்த சிப்ஸ் எங்கனு தேடும்.
வாழைபழத்தில் பல வகைகள் உண்டு. அதே போல வாழைபழத்தில் பலவகையான இனிப்புகள் மற்றும் பல தீனி பொருள்களும் செய்யலாம். இந்த வாழைப்பழ சிப்ஸ் எப்படி பன்ன்றாங்கனு பாக்கலாம்.
இது செய்ய அப்படி என்ன தேவை ?
1. ஏத்தக்காய் அல்லது நேந்தரம் : 3
2. மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
3. உப்பு கரைத்த தண்ணீர் : 1 ஸ்பூன் உப்பு / 1/2 கப் தண்ணீர்
4. தேங்காய் எண்ணெய் : வறுக்க
இப்போ இந்த அருமையான சிப்ஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
1. எடுத்து வைத்த வாழைக்காயை அதன் தோலை முதலில் நீக்க வேண்டும். பின்பு அதனை மஞ்சள் கலந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. 30 நிமிடம் நன்கு ஊரிய பின்பு அதனை சிறிசிறு வட்ட துண்டுகளாக வெட்ட வேண்டும்.
3. வெட்டிய தொண்டுகளின் மீது சிறிய அளவு உப்பினை தூவி, அதனை டிச்சு அல்லது துணியின் மீது ஆற வைக்கவேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெட்டி வைத்த துண்டுகளை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
4. நன்கு பொன்னிறம் கலந்த மஞ்சள் நிறத்தில் வந்தததும் எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுக்கவேண்டும்.
5. பொரித்த வாழைக்காய் தற்போது சிப்ஸாக உண்ண தயாராக உள்ளது.
நல்ல டேஸ்டா இருக்குமே. இந்த வாழைக்காய் சிப்ஸ் தேங்காய் எண்ணெய் மட்டுமில்லை சூரியகாந்தி எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.
இந்த நேந்தரம் சிப்ஸ் அவ்வளவு மொருமொருவென உண்ண உண்ண தெகட்டாமல் இருக்கும். இத்தகைய சுவையான சிப்ஸ நீங்க மிஸ் பண்றீங்களா..? இல்ல இன்னும் சாப்பிடாம இருக்கீங்களா..? இன்னும் யாருக்குங்க வெயிட் பண்றீங்க? சீக்கிரம் ஸ்வீட்கானா.காம் இணையதளத்திற்கு வாங்க. நீங்க சாப்பிட துடிக்கும் இந்த நாகர்கோயில் சிப்ஸ வங்கி சாப்பிடுங்க.
கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், கிட்டத்தட்ட கேரளா பார்டரில் தான் இந்த நாகர்கோயில் உள்ளது. அதனால், இந்த நேந்தரம் சிப்ஸ் கேரளாவில் மட்டுமில்லங்க நம்ம தமிழ் நாட்டிலும் பிரபலம் தான்.
இந்த நேந்தரம் பழ சிப்ஸ் மஞ்சள் நிறத்தில், நல்ல தரமானதாக பார்க்கவே வட்டவடிவில் நம்மை சாப்பிட தூண்டும் அளவுக்கு இருக்கும். இது இவங்களுக்குதான் பிடிக்கும், இவங்களுக்கு பிடிக்காதுன்னு எதுமே இல்லங்க. இந்த நேந்தரம்/ ஏத்தகாய் சிப்ஸ் பிடிக்கலன்னு யாருமே சொல்லமாட்டங்க. அவ்வளவு பிடிக்கும் எல்லாருக்கும்.
இதுலயும் இந்த சிப்ஸ் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்னு. பெரியவங்களுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைம்ல டீ, காபியோட இதையும் சாபிடுவாங்க. அவ்வளவு ஏங்க, ஸ்கூல், காலேஜ், ஆபிஸ், இன்னும் பல இடத்துல கூட யாராவது கேரளா, நாகர்கோயில் பக்கம் இருந்தா அவங்க ஊருக்கு போகும் பொழுது கண்டிப்பா திரும்பி வரும்போது நேந்தரம் சிப்ஸ் வாங்கிட்டு வர சொல்லுவாங்க. அந்த அளவுக்கு இது உலகம் முழுவதும் பிரபலம்.
கேரளா மற்றும் கன்னியாகுமரியில் இந்த வாழைப்பழ சிப்ஸ குழந்தைகளுக்கு தினமும் உண்ண கொடுப்பார்கள். இந்த சிப்ஸில் அப்படி என்ன இருக்கின்றது? அதுவும் தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு? ஆமாங்க, இதில் ருசி மட்டும் தரமானதாக இல்லை ஆரோக்கியமும் உடன் இருக்கின்றது.
இந்த சிப்ஸில் வைட்டமின்கள், மினரல், பைபர், இருப்புசத்து மற்றும் பொட்டசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சிப்ஸ் இந்தியாவில் மட்டுமில்லை லாட்டின், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிகவும் பிரபலம்.
இவ்வளவும் ஒரே பொருள்ள இருக்கு, அதுவும் ரொம்ப டேஸ்டாகவும் இருக்கு இத இப்டியே படிச்சிட்டு மட்டும் இருக்கபோறீங்களா..? சீக்கிரம் படித்த ருசி மாறதுக்கு முன்னாடி இதோட முழு ருசியையும் வாங்கி சுவைத்து மகிழுங்கள். நீங்க இருந்த இடத்தில் இருந்தே உங்க ஸ்வீட்கானா.காம்-ல்.