காரமா மட்டுமில்ல தரமாவும் இருக்கும் இந்த சாத்தூர் சேவு..!!
கார சாரமான உணவு பண்டங்கள் பலவகை உண்டு. அதில் சிறந்து விளங்குவதுதான் இந்த சாத்தூர் காராச்சேவு. இந்த உணவு பண்டம் சிறந்து விளங்குவத்தின் காரணம் இதன் மொரு மொரு தன்மை மற்றும் அலாதியான சுவை தான்.
தமிழ்நாடு மாநிலத்தில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழாகான நகராட்சி தான் இந்த சாத்தூர். இங்கே பல உணவு பண்டங்கள் நேர்த்தியாக தயாரிக்கப்டுகின்றன. ஏனெனில் இங்கே தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள் வெறும் வியாபார ரீதியாக அல்லாமல், அதை ஒரு பாரம்பரிய தொழிலாக நிறுவி வருகின்றன.
பொதுவாக விருதுநகர் மாவட்டத்தில் தான் வத்தல் (வரமிளகாய்) அதிகம் விளையும் ஊர்கள் உள்ளன, அது மட்டும் இல்லாமல் இங்கு பனை மரங்களும் மிக அதிகம். இந்த விருதுநகர் மாவட்ட வத்தல் பொடி சேர்ப்பதாலும் இப்படி மற்ற ஊர்களை போல் அல்லாமல் சூரிய காந்தி எண்ணெய்க்கு பதிலாக கடலை எண்ணெய் பயன்படுத்துவதாலும் ருசி அதிகம் என்று பலர் நம்புகின்றனர்.
இப்படி தயாரிக்கப்பட்ட ருசி மிகுந்த சாத்தூர் சேவு பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட ஓலை பெட்டியில் தான் வைத்து கொடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலை பெட்டி பயன்படுத்த பட்டு வந்தது ஆனால் தற்பொழுது பாலிதீன் பைகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை ருசி மிகுந்த காரா சேவு சாத்துருக்கு சண்முக நாடார் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மொரு மொரு சாத்தூர் சேவு எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 2 கப் ( 400 கிராம்)
பச்சரிசிமாவு - 2 தேக்கரண்டி
வெண்ணை - 5 தேக்கரண்டி
காரப் பொடி - 1 தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு - 4 பல்
மிளகு - 1தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை:
பூண்டு, பெருங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். மாவில் சீரகம், உப்பு, மிளகாய் தூள், பூண்டு பெருங்காயம் விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை கொதிக்க வைக்கவும். சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனித் தனி அச்சு நிறைய உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும். பொன்னிறமாக பொரிந்ததும் எடுக்கவும்.
இந்த மொரு மொரு கார சாரமான காரச்சேவுவை எங்கே வாங்கி சாப்பிடுவது ? தரமானதாகவும் மற்றும் விலை கம்மியாக இருக்க வேண்டும் ? எங்கே வாங்குவது ? என்ன யோசிக்கிறீங்க.?
யோசிக்கவே வேண்டாம் .. இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.
இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.
நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.