ஜெயா மூவிஸில் ஷாலினி நடித்த 'ஓசை', நியூஸில் பிரார்த்தனை செய்திகள்
சென்னை: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வேளையில் ஜெயா மூவிஸில் ஓசை படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அவரது ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஜெயா மூவிஸில் மோகன், நளினி, ராதிகா, பேபி ஷாலினி நடித்த ஓசை படம் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் ஜெயா செய்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா விடுதலையாகி வர வேண்டி அதிமுகவினர், பொதுமக்கள் செய்யும் பிரார்த்தனை குறித்த செய்திகள் ஒளிபரப்பாகிறது. அதே போல ஜெயலலிதாவின் சாதனைகளும் பட்டியல் இடப்பட்டு வருகின்றன.
ஆண்டவன் அருளால் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாவார் என்று பிரார்த்தனை செய்வோர் அந்த தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு பற்றி விமர்சித்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து அதிமுகவினர் விமர்சித்து வரும் செய்தியும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications