2016ல் தனித்து போட்டி... ஆர்.கே.நகரில் இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு: சீமான்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர்கட்சி தனித்து போட்டியிடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கடந்த மே 26ம் தேதி இன எழுச்சி அரசியல் மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்றார்.

தமிழகம் முழுவதும் பயணம்
எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை தேர்தலை நோக்கிய பயணம். அதற்காக வருகிற ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும் பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்குகிறோம். ஊர் ஊராக சென்று ஏன்? நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரித்து வேலை செய்யவில்லை ஆனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று திருச்சி, மதுரை, புழல், கோவை, வேலூர் சிறைச்சாலைகளை ஜூலை மாதம் 10ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

2016 சட்டசபை தேர்தல்
பண நாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காப்போம். நமது அதிகாரம் நமது மக்களுக்கு தான் என்பதை உணர்த்தும் முழக்கங்களை மக்களிடம் வைப்போம். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் வருகிற 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறோம், புதுச்சேரியிலும் தனித்து போட்டியிட உள்ளோம்.

வேட்பாளர்கள் யார் யார்
தனித்து போட்டி என்று அறிவித்த சீமான் முதற்கட்டமாக வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார்.
நாகர்கோவில் - கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர், சிவகங்கை - வழக்கறிஞர் எழில்குமரன், திருவாடனை - வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன், சோழிங்கநல்லூர் - வழக்கறிஞர் இராசன், திருப்பத்தூர் - கோட்டைக்குமார், மைலம் - மருத்துவர் விஜயலெட்சுமி, அம்பத்தூர் - அன்புத்தென்னரசன், கவுண்டம்பாளையம் - இயக்குனர் கார்வண்ணன், கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில் ஆகியோர் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பேராவூரணி, சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத்தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications