கும்பகோணம் மகாமகம்: 5 நாளில் 10.60 லட்சம் பேர் புனித நீராடல்
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் 5ம் நாளான நேற்று 1 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். 5 நாட்களில் 10.60 லட்சம் பேர் நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கும்பகோணம் மகாமகம் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாளில் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் நீராடினர்.
2வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரத சப்தமி நாள் என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் நீராட வர தொடங்கினர். திருவிழாவின் 3வது நாளிலிருந்து வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
திங்கட்கிழமை ஏராளமான வேத விற்பன்னர்கள் குளத்தில் புனித நீராடிய பின்னர் பீஷ்மதர்ப்பணம் செய்தனர். செவ்வாய் கிழமையும் இதே போன்று கூட்டம் காணப்பட்டது. இதன்பின்னர் 5ம் நாளான நேற்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் மதியம் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

10.60 லட்சம் பேர் நீராடல்
ஒவ்வொரு கிணறுகளிலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து பக்தர்கள்மேல் தெளித்து விரைவாக வெளியேற்றினர். நேற்று ஒரு நாள் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். மகாமக திருவிழா தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று மாலை வரை மகாமக குளத்தில் 10.60 லட்சம் பேர் நீராடி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனித தீர்த்த கிணறுகள்
மகாமகம் குளத்தில் 20 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. ஒவ்வொரு புனித தீர்த்த கிணறுகளின் பெயர் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பிரம்ம தீர்த்தம் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த போர்டு நேற்று திடீரென சரிந்தது. இதனால் அதை தீயணைப்பு வீரர்கள் கழற்றி கரையின் அருகே வைத்தனர். பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

வெள்ளி பல்லக்கில் வீதியுலா
மகாமக பெருவிழாவின் பிரதான கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் விழாவின் 5ம் நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலா வந்தனர்.பின்னர் மதியம் சுவாமி தன்னைத்தானே பூஜிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓலைச்சப்பரத்தில் பவனி
அதனைத்தொடர்ந்து, இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி ஓலைசப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications