சொந்த தொகுதியில் ப.சி. கூட்டத்துக்கு வந்தது வெறும் 10 பேர்: பாதுகாப்புக்கோ 100 பேர்

ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முட்டி மோதியது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை கூட அறிவிக்காத நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். அப்பாவுடன் சேர்ந்து மகன் கார்த்தி சிதம்பரமும் பிரச்சாரம் செய்கிறார்.
சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடியில் சிதம்பரம் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறியபோது கார்த்தி மக்களை பார்த்து கும்பிடு போட்டார். அவர் கும்பிடு போட்டதை பார்த்தால் அவர் தான் சிவகங்கை தொகுதி வேட்பாளரோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியோ சிவகங்கை தொகுதியில் நிற்க கார்த்திக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டதாகவல்லவா கூறப்பட்டது.
சிதம்பரம் பேசிய இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 10 தான். ஆனால் இக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிக்க வந்த போலீசாரின் எண்ணிக்கையோ 100 ஆகும். ஆக பேச்சை கேட்க வந்தவர்களை விட பாதுகாப்பு அளிக்க வந்தவர்கள் தான் அதிகம்.
சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கையிலேயே அவருக்கு இந்த நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications