கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேசமுடியாது- ப.சிதம்பரம்
கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேச முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை: கருணாநிதி இல்லாத 60 ஆண்டுகால தமிழ்நாட்டை யாரும் பேச முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் அவர் நேற்று மாலை காலமானார்.

அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் சிஐடி காலனி இல்லத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி இல்லாத 60 ஆண்டு கால வரலாற்றை யாரும் பேச முடியாது.
இயல், இசை, நாடகம் என இத்தனை துறைகளில் வேறு யாரும் முத்திரை பதித்ததாக எனக்கு தெரியவில்லை என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications