அரசு மருத்துவமனையில் நாள்பட்ட வலிக்கான நிவாரண மையம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை: நாள்பட்ட வலிக்கான நிவாரண மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
அதிக வலியுடன் கூடிய புற்றுநோயாளிகள், கட்டுப்படுத்த முடியாத முதுகு வலி, கழுத்து வலி, தலைவலி, பாத எரிச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். மயக்கவியல் துறையில் இந்த நிவாரண மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மையத்தை தொடங்கி வைத்தார். நோயாளிகள் உடலில் பொருத்தப்பட்டு அவர்களாகவே இயக்கும் நடமாடும் வலி குறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் ரூ. 50 லட்சம் செலவில் இந்த மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் இந்த மையம் செயல்படும்.
மையத்தின் சிறப்பு குறித்து செய்தியாளர்களிடம் டாக்டர் ஜி.கே.குமார் பேசியதாவது:
ஒரு நபருக்கு மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வலிகள் நாள்பட்ட வலி என்று கருதப்படுகிறது. உலக அளவில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளில் 80 சதவிதத்தினர் உடலில் ஏற்படும் வலியின் காரணத்தினால்தான் மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். மேலை நாடுகளில் நாள்பட்ட வலிக்கென்று பிரத்தியேக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிவகத்தில் இதற்கான சிகிச்சைகள் மிகவும் குறைவாக உள்ளது.
அந்தக் குறையை போக்கும் விதமாக இந்த மையத்தை தொடங்கியுள்ளோம். வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications