பாக்.கிலிருந்து 6 தீவிரவாதிகள்.. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுறுவ திட்டம்?
நாகர்கோவில்: பாகிஸ்தானைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி பெரும் நாச வேலையில் ஈடுபட முயன்று வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இவர்கள் தங்களது ஊடுறுவலுக்கு தமிழக மீனவர்களின் படகுகளைப் பயன்படுத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
இதையடுத்து தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

6 பேர்
பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்ற 6 பேர் தற்போது இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுறுவக் காத்துள்ளனராம்.

கடல் மார்க்கமாக
இலங்கையிலிருந்து படகுகள் மூலமாக இவர்கள் ஊடுறுவத் திட்டமிட்டுள்ளனராம்.

தமிழகத்திற்கு குறி
தமிழகத்திற்குள் ஊடுறுவிய பின்னர் தமிழகத்தில் பெரும் நாச வேலையில் ஈடுபடுவதே இவர்களின் திட்டம் என்று கூறப்படுகிறது.

கடலோரக் கண்காணிப்பு அதிகரிப்பு
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பையும், சோதனையையும் அதிகரித்துள்ளனர்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நள்ளிரவு முதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்புச் சோதனைச் சாவடிகள்
கன்னியாகுமரி, சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கடற்கரை கிராமங்களுக்குள் சென்று திரும்பும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குமரியில் பலத்த பாதுகாப்பு
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.












Click it and Unblock the Notifications