பழனி யாத்ரீகர்கள் மேல் மோதிய அரசுப் பேருந்து- பெண் உட்பட இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பூரில் இருந்து தாராபுரம் நால்ரோடு வழியாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, பத்கர்கள் மீது எதிர்பாராமல் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications