Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணிப்பையை பயன்படுத்துவோம்.. பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் பழநி கோவில் நிர்வாகம்!

Subscribe to Oneindia Tamil

பழநி : பழநி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பாக இலவச துணிப்பைகள் வழங்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்ப்போம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மளிகைக்கடை முதல் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும்கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவுரையின்படியும் பழனி தண்டாயுதபாணி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படியும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடைபெற்றது.

Palani temple distributes free cotton bags to devotees

பழநிகோவில் இணைஆணையர் செல்வராஜ் தலைமையில் பழநி வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கேரிபைகளை தவிர்க்கும் விதமாக துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பழநி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கேரிபேக்கில் தேங்காய், பழம், பூ, பத்தி, சூடம், பால் என வைத்துக்கொண்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை மாற்றவே பழநி தண்டாயுதபாணி கோவில் சார்பில் மலைக்கோயில் வருகை தரும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துமாறு அறிவுரை கூறி இலவசமாக துணி பைகளையும் நிர்வாகத்தினர் வழங்கினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+