Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்ட பேரணி - பாளையில் திரளும் இளைஞர்கள்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பாளையங்கோட்டையில் இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டுக்கு ஆதரவாக சமூக வளைதலங்களில் சமீப காலமாக பரவலாக பல கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டை எப்படியாவது நடத்தியே தீர வேண்டும் என அரசியல் கட்சிகள் வரித்து கட்டி கொண்டு செயல்படும் சூழ்நிலையில் இளைஞர்களும் அதற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் குருப்பில் ஜல்லி கட்டை நடத்தும் வகையில் அதனை முகப்பு படமாக வைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை சேர்ந்த சமூக வளை தல இளைஞர்களை திரட்டி பாளையில் பிரமண்ட ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Palayamkottai getting ready to protest in support of Jallikkattu

பாளையங்கோட்டையை சேர்ந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் ஜல்லி கட்டுக்கு ஆதரவாக தற்போது இளைஞர்களை திரட்டி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாளை ஜவஹர் திடலில் நடக்கும் ஜல்லி கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொண்டுள்ளார்.

இளைஞர்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு பேச்சு வா்ர்த்தை நடந்து வருகிறது. போலீசார் அனுமதி கிடைத்தவுடன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+