புத்தூர் தாக்குதலில் படுகாயமடைந்த பன்னா இஸ்மாயில் உயிர் ஊசல்

அவனது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வயிற்றில் பாய்ந்த குண்டை எடுத்தால் அவன் உயிரிழப்பான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தூர் பகுதியை நேற்று சுற்றி வளைத்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் கைது செய்வதற்கு முன்பு போலீஸார் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் இருவரும் போலீஸாரைத் தாக்கினர். இதையடுத்து போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள வீட்டுக்குள் வீசினர். மேலும் துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர். இதில் இஸ்மாயில் படுகாயமடைந்தான்.
அவனை முதலில் புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்மாயிலின் உடலில் உள்ள குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டு இஸ்மாயின் கல்லீரம் மற்றும் குடலுக்கு நடுவே மாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற 5 மணி அறுவை சிகிச்சையின் போது குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குண்டை அகற்றினால் பன்னா இஸ்மாயில் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் உயர் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications