ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு: தமிழக முதல்வர் ஓ.பியின் பெங்களூர் பயணம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வர இருந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென பயணத்தை ரத்து செய்தார்.

சிறையிலுள்ள ஜெயலலிதாவை சந்திக்க நேற்றுமுன்தினம், பன்னீர் செல்வம் தலைமையில் மூத்த அமைச்சர்கள் பெங்களூர் வந்தனர். நேற்று மாலை வரை பெங்களூரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அந்த குழுவை சந்திக்க, ஜெயலலிதா அனுமதியளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்றிரவு, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் சென்னைக்கு திரும்பினார்.
இந்நிலையில், இன்று ஹைகோர்ட் நீதிபதி, ஜாமீன் அளித்துவிடுவார் என்று நினைத்து ஜெயலலிதாவை சந்திக்க பன்னீர்செல்வம் பெங்களூர் கிளம்ப தயாராக இருந்தார். ஆனால் ஜாமீன் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போனதால், தனது விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications