தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடப்பதை உறுதி செய்த ஓபிஎஸ்.. திருநாவுக்கரசர் பொளேர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பாஜக புகுந்து விட்டது-திருநாவுக்கரசர்- வீடியோ
சென்னை: தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஜெ.மறைந்த முதல் நாளில் இருந்தே நான் இங்கு பாஜக பினாமி ஆட்சி நடக்கிறது என்றுதான் கூறி வந்தேன். முதலில் மறைத்தாலும் இப்போது ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதிமுக பிளவுபட்டதும் மோடியால்தான். மோடி மற்றும் அமித்ஷா டைரக்ஷன் படிதான், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. பன்னீர்செல்வம் இப்போது அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடி கூறியதால்தான் அதிமுக அமைச்சரவையில் இணைந்தேன் என பன்னீர்செல்வம் நேற்று அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய உரை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications