சசி முதல்வரானால் ஓபிஎஸ்ஸை டம்மியாக்க சசி தரப்பு பக்கா ப்ளான்!
சசிகலா முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. அப்படி முதல்வரானால் ஓபிஎஸ்ஸை டம்மியாக்கும் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர்
சென்னை: சசிகலா முதல்வரானால் ஆட்சியிலும் கட்சியிலும் ஓ. பன்னீர்செல்வம் தலையெடுக்காத வகையில் பக்கா ப்ளான் போட்டு கொண்டிருக்கிறது மன்னார்குடி தரப்பு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி கோஷ்டியை எதிர்த்துக் கொண்டு மத்திய அரசின் ஆதரவில் முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். இதை ஏற்க முடியாமல் கொந்தளித்தது மன்னார்குடி கோஷ்டி.

ஒருவழியாக நாடகங்களை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலரை கைப்பற்றிவிட்டார் சசிகலா. அடுத்ததாக முதல்வர் பதவிக்கு அடிபோட்டு வருகின்றனர்.
அப்படி சசிகலா முதல்வரானால் ஓபிஎஸ் மூலம் எந்த ஒரு குடைச்சலும் வந்துவிடக் கூடாது; இனி அதிமுகவிலும் ஓபிஎஸ் தலையெடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சசி அண்ட் கோவினர். இதற்காகவே ஓபிஎஸ்ஸை எப்படி டம்மியாக்குவது என தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இறுதியாக ஓபிஎஸ்ஸை சபாநாயகராக்கிவிட்டால் அவர் வசம் உள்ள கட்சி பொருளாளர் பதவியையும் பறித்துவிடலாம்; ஆட்சியிலும் கட்சியிலும் அவர் தலையெடுக்கவே முடியாத நிலையை உருவாக்கிவிடலாம்; தற்போதைய சபாநாயகர் தனபாலை அமைச்சராக்கிவிடலாம் என ப்ளான் போட்டு வைத்திருக்கிறார்களாம்.
மன்னார்குடியின் இந்த தூண்டிலில் ஓபிஎஸ் சிக்கினால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கவலைப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications