எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தினசரியும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டும் படையல் போட்டும் கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மற்றும் தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications