பண்ருட்டியாரை விரட்டியடித்துள்ளனர்.. சொல்கிறார் சேந்தமங்கலம் சாந்தி

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக அதிருப்தியாளராக மாறியவர் சாந்தி.
இவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையில், தேமுதிகவின் கூடாரம் இனி காலியாகும். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்னும் வெளியேறுவார்கள்.
தேமுகவில் யாருக்கும் மரியாதை இல்லை. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவார் என நாங்கள் எதிர்பார்த்ததுதான். கட்சியின் மூத்த தலைவரான அவரது பேச்சைக் கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவர் கட்சியில் புறக்கணிக்கப்பட்டார்.
ஐ.நா. சபையில் பேசும் அளவுக்குத் தகுதியுடைய பண்ருட்டி ராமசந்திரன் நல்ல தலைவர். மனம் நொந்து வெளியே வந்திருக்கார் என்றால், இது அவராக எடுத்த முடிவாக இருக்காது. அவர் விரட்டியடிக்கப்பட்டுதான் வெளியே வந்துள்ளார்.
இனி எப்படி தேமுதிக வளர்ச்சியடையும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அந்தக் கட்சி வளர்ச்சியடையாது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கட்சியில் உள்ள மூவர் அணிதான் கட்சியைச் சீரழிக்கிறது. அவர்களால்தான் 7 எம்எல்ஏ-க்கள் வெளியேறினர். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியுள்ளார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றார் சாந்தி.
இவர் மூவர் அணி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோரைத்தான் சொல்கிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications