ஆளுநரைத்தான் கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.. பண்ருட்டி வேல்முருகன் அதிரடி
சென்னை: நிர்மலா தேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய காவல்துறை, நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசைத்திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர்!
கல்லூரி மாணவிகளை பாலியல் விவகாரத்திற்கு அழைத்ததற்கான வழக்கில் நிர்மலாதேவி மீது விசாரணை நடந்துவருகிறது. அந்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்ததாகக் கூறியிருந்த செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அத்தகைய ஒரு செய்தி நக்கீரன் பத்திரிகையிலும் வெளியானதை வைத்தே கோபால் கைது செய்யபட்டார் என்று தெரியவருகிறது.
நாம் கேட்பது இதைத்தான்: பத்திரிகையில் ஒருவரைப் பற்றிய செய்தி வந்தால் அந்தப் பத்திரிகை ஆசிரியரை எப்படிக் கைது செய்ய முடியும்? சட்டவிரோதமாக கோபாலை இதற்காக கைது செய்வது என்றால் "குற்றமுள்ள மனது குறுகுறுக்கும்" என்பதாலா?
அதனால்தான் சொல்கிறோம்: நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!
[ மாதவரத்தில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையம் திறப்பு.. கோயம்பேட்டில் கூட்டம் குறையுமா? ]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசை திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications