இரட்டைக் கொலை... தப்பி ஓடிய கள்ளக்காதலன் கைது.. நாகர்கோவிலில் பதுங்கிய அபிராமியைப் பிடிக்க தனிப்படை!
Recommended Video
குன்றத்தூர்: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.
இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வங்கியில் வேலை காரணமாக விஜய் இரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கி விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜய் கதவை திறந்து பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்து அலறினார். தகவலின்பேரில் குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி அபிராமிக்கு பலமுறை போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் குன்றத்தூர் - போரூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அபிராமியுடன் இருந்த கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார். மேலும் தனக்காகவே அவரது குழந்தைகளை அபிராமி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.