காரைக்குடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் முதல் பருவத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமதி. சுகுணா தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

Parents teachers meeting held in Karaikudi school

கூட்ட்தில் முதல் பருவத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு (PADGE) பேட்ஜ் அணிவிக்கப்பட்டது. முதல் பருவத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Parents teachers meeting held in Karaikudi school

பெற்றோர்களிடம் மாணவர்களின் கல்வி தர அட்டைகள் காண்பிக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது. இரண்டாம் பருவத்தில் மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்லுதல், எழுத்து பயிற்சி அளித்தல் போன்ற பள்ளியில் செயலபடுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

Parents teachers meeting held in Karaikudi school

பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திருமதி.சித்ரா நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி.விஜயலெட்சுமி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+