ஜெ. கொள்கைக்கு மாறாக ஆட்சி, கட்சி ஒரு குடும்பத்தின் கையில் போய்விட்டது- ஓபிஎஸ் ஆதங்கம்
ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களே அதிமுகவை வழிநடத்த வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாகவும் அவர் கூறினார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெற்றி பெற்ற தொகுதியான ஆர்கே.நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் சசி குடும்பத்தின் கையில் ஆட்சி, கட்சி போக கூடாது என உறுதியாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். அதிமுகவை தொண்டர்களே வழி நடத்த வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாகவும் ஓபிஎஸ் கூறினார்.
ஆனால் தற்போது ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறான நிலையே உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். விரைவில் தர்மம் வென்று கட்சியும் ஆட்சியும் மீட்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.