சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்ட 1 கிலோ துபாய் தங்கம் - கடத்தி வந்த பயணி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை வெளிநாடுகளில் இருந்து வந்த விமானிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது துபாயிலிருந்து வந்த ரஹ்மான் என்ற பயணியிடம் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் தங்கத்தை பறிமுதல் செய்து ரஹ்மானை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 35 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரஹ்மானை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications