மர்மமான முறையில் மயில்கள் சாவு... குடிக்கத் தண்ணீர் இல்லாததால் இறந்தனவா? -வீடியோ

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்துள்ளன. தண்ணீர் இல்லாத காரணத்தாலும் மயில்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ஆறு மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அதிகளவு மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் நிலங்களில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இந்நிலையில் மர்மமான முறையில் ஆறு மயில்கள் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

 In Pasupathipalayam peacocks died with unknown reason

அதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கு கிடந்த மயில்களை கைப்பற்றினர். மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவிய காரணத்தால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிக்கத் தண்னீர் இன்றி இறந்துள்ளன. தற்போதும் கரூரில் வறட்சி நிலவுவதால் மயில்கள் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தாலும் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறிகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+